பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே கோரையாற்றின் குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு, நான்கு வழிப்பாதை பாலம்

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே கோரையாற்றின் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு, ரூ.30 கோடி செலவில் நான்கு வழிப்பாதை பாலம் கட்ட அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
வரும் மூன்று மாதங்களில் கட்டுமானப் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு அருகில்தான் இந்த பாலம் கட்டப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் வரும் மூன்று மாதங்களில் கட்டுமானப் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது
திருச்சி மாநகரத்தின் முக்கிய சாலையான திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் (NH) இந்த பாலம் அமைந்துள்ளது. கிராஃபோர்ட் சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றும் பணி நவம்பர் 2024-ல் முடிவடைந்தது. ஆனால், கோரையாறு குறுக்கே உள்ள இந்த குறுகிய பாலம் மட்டும் அப்படியே இருந்தது.
தற்போது, அந்த பாலத்தையும் அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இந்த சாலை, திருச்சி நகர்ப்புற சாலை (SHU 132) என்று அழைக்கப்படுகிறது. இது பழைய NH 45 சாலையின் ஒரு பகுதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் மற்றும் கிராஃபோர்ட் பகுதிகளை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கிறது.
இந்நிலையல் சட்டமன்ற கூட்டத்தில், புதிய கோரையாறு பாலம் கட்ட அரசு ரூ.30 கோடி ஒதுக்கி அறிவித்துள்ளது. "SHU 132, மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து IBT-க்கு செல்லும் மக்களுக்கு முக்கியமான இணைப்புச் சாலையாக இருக்கும். பாலத்தின் வேலையை ஒரு வருடத்தில் முடிப்போம்" என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதாவது, இந்த சாலை வழியாக ஐபிடி பேருந்து நிலையத்திற்கு எளிதாக செல்ல முடியும். தற்போதுள்ள பாலம் 9 மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. இதை இடித்துவிட்டு, நடைபாதைகள் உட்பட 20 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதை பாலம் கட்டப்பட உள்ளது. 1.6 கி.மீ நீளமுள்ள சாலையில், கோரையாறு பாலத்தின் அருகே மட்டும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. புதிய பாலம் கட்டப்பட்டால் ஐபிடி மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு இடையே செல்லும் பேருந்துகளும் இந்த பாலத்தை பயன்படுத்த எளிதாக இருக்கும்.
புதிய பாலம் மற்றும் SHU 132 சாலையை விரிவுபடுத்திய பிறகு, மாநகராட்சி கோரையாற்றின் கரையில் புதிய இணைப்புச் சாலை அமைக்க உள்ளது. இது ஐபிடியை திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும். இந்த சாலை பாலத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில் இருக்கும். இதன் மூலம் ஐபிடி பேருந்து நிலையத்திற்கு செல்ல பல வழிகள் உருவாகும். இதனால், போக்குவரத்து நெரிசல் குறையும். நேரமும் விரயமாகாது.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....