நாளை திருச்சியில் வேலைவாய்ப்பு முகாம்

முகாமில் தொழில்துறை,சேவை துறை, மற்றும் விற்பனை துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து இலவச திறன் பயிற்சிக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். இத்ததனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள், மற்றும் பொறியியல் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலை நாடுனர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுயவிவர குறிப்பு அனைத்து கல்வி சான்றுகள், நகல்கள், ஆதார் அட்டை,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலை நாடுனர்கள் நாளை (21. 03. 2025 ) அன்று வெள்ளிக்கிழமை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்திறனை நேரிலோ அல்லது0431-2413510,94990-55901,94990-55902 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....